துபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் அகப்பட்டது

Date:

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (21) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகராவார்.

இவர் டுபாயிலிருந்து SL-226 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

பின்னர், இந்த பயணி மற்றும் அவர் சட்ட விரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...