போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிவிப்பின்படி, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பித்துள்ளமையினால், குறித்த செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை அபராதமின்றி மீளப்பெற முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தை அணுகுவதன் மூலம், ஆன்லைன் முறையின் கீழ் வாகன வருமான உரிமங்களைப் பெறுவது செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.