மட்டக்களப்பு மக்களின் தேவை என்ன? விவரிக்கிறார் சஜித்

Date:

“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை ஏற்படும், கடன் நிவாரணங்களை பெறும்போதும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அவர்கள் முகம் கொடுக்கும் அடுத்த பிரச்சினை தான் மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபை இல்லை. கமநல சேவை மத்திய நிலையங்களின் எண்ணிக்கையும் இங்கு மிகவும் குறைவானதாக இருக்கிறது. இருக்கும் கமநல மத்திய நிலையங்களிலும் போதுமானளவு அதிகாரிகளும் இல்லை.

அதே போல் காட்டு யானை – மனித மோதலை தடுப்பதற்கான தீர்வுகளும் அவசியமாகும்.”

இவ்வாறு சஜித் பிரேமதாஸஎதிர்க்கட்சித் தலைவர் கடந்த (23/09/2022) ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...