இலங்கையின் கடன் நெருக்கடிக்கு ஜப்பான் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கையின் நிதி அமைச்சர் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் நேற்று (29) அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இணங்கியுள்ளதுடன், இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக நேச நாடுகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடியதன் விளைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானின் ஆதரவைப் பெற முடிந்தது.
எவ்வாறாயினும், இதற்கு சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவையும் பெற வேண்டும் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் வலியுறுத்துகிறார்.
அத்துடன், இந்த ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான தகவல்களை இலங்கை வழங்க வேண்டும் என்று கூறியுள்ள ஜப்பானிய நிதியமைச்சர், ஏனைய கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கையே செயற்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கு இது முக்கியமானது என்று Shunichi Suzuki வலியுறுத்தினார்.