இலங்கை மீனவர்கள் படகு விபத்து

Date:

இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 05 இலங்கை மீனவர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ”ரன்முத்து துவ 10″ எனும் மீன்பிடிப் படகில் கடந்த 12 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும் அந்த படகு கடந்த 26ஆம் திகதி விபத்துக்குள்ளானதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான படகு தற்போது இந்திய கடற்பரப்பில் மிதந்து கொண்டு இருப்பதாக படகின் உரிமையாளருக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகில் இருக்கும் மீனவர்களுக்கு உதவுவதற்காக மற்றுமொரு படகை அனுப்பியுள்ளதாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் வௌிவிவகார அமைச்சின் ஊடாக இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...