மோடியின் புதிய வியூகம்; சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் கைகோர்க்கிறது

Date:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பாவை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை (IMEC) உருவாக்க தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதன்படி, இந்தப் பொருளாதாரப் பாதை அடுத்த சில நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் பிரதான மையமாக இருக்கும்.

இதன் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே ரயில் மற்றும் கடல் வலையமைப்புகள் மூலம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் விரிவுபடுத்தப்படும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

IMEC வழித்தடம் தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ‘ஒரு பாதை – ஒரு பெல்ட்’ திட்டத்திற்கு அமெரிக்காவும் ஆதரவளிக்கும் என பலரால் கூறப்பட்டது.

சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் மூலோபாய செல்வாக்கைப் பெறுவதற்கான உள்நோக்கத்துடன் அமெரிக்கா இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கும்.

இந்த திட்டத்தில் ஈடுபடுவதால் அமெரிக்காவிற்கு எந்த குறிப்பிட்ட நன்மையும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் சீன விரிவாக்கத்தை எதிர்கொண்டு இந்தியாவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் அதன் இராஜதந்திர இருப்பை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்கிறதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...