7 நாடுகளின் தூதுவர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு

Date:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (02) 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார்.

அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன.

இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக கியூப தூதுவர் உறுதி அளித்தார்.

டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகளை சுட்டிக்காட்டிய கியூப தூதுவர் இலங்கையுடன் டெங்கு ஒழிப்புக்கு அவசியமான பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்திய தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தத்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...