இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன புதிய தலைவர் சாலிய

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

CEYPETCO இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL இன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் இன்று (05) முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

நேற்று (04) ராஜினாமா செய்த மொஹமட் உவைஸ் மொஹமட்க்குப் பதிலாக விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் பணியாற்றுவதுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...