ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நசீர் விரட்டியடிக்கப்பட்டது சரியே – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Date:

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இது உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் மனு ஆராயப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவான நசீர் அஹமட் 21வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு அளித்து கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார்.

இதனை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இதனை சவாலுக்கு உட்படுத்தி அஹமட் நசீர் வழக்கு தாக்கல் செய்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அஹமட் நசீரை கட்சியில் இருந்து நீக்கியமை சட்டபூர்வமானதே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...