பொலிஸ் மா அதிபருக்கு மூன்றாவது தடவையாக சேவை நீடிப்பா?

Date:

பொலிஸ் மா அதிபராக செயற்பட சி. டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு நாளையுடன் (9) முடிவடைவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பு வழங்கினார்.

2020 நவம்பர் மாதம் இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.

முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதி மேலும் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் அப் பதவிக்கு வேறொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா அல்லது சி. டி. விக்கிரமரத்னவுக்கு மூன்றாவது சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...