ரஞ்சனின் திடீர் அறிவிப்பு

0
72

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சமகி ஜன பலவேகவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியுடன் மீண்டும் போட்டியிடத் தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரையறுக்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

அதன்படி, பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. அதற்கான அனுமதியை புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here