யானை சின்னத்தின் வெற்றி – இ.தொ.கா கலந்துரையாடல்

Date:

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக கொட்கலை CLF வளாக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (13) கலந்துரையாலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இ.தொ.கா முக்கியஸ்த்தர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், தோட்டக்கமிட்டி ,மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டனர்.

2024 பாராளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...