“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

Date:

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கும் அதன் பின்னர் சொத்து சேதங்களை சீர்செய்வதற்கும் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மேலதிக 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, தேவையென்றால் மேலும் நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சொத்துக்கள் முழுமையாக சேதமடையாத மக்களின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...