“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

Date:

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கும் அதன் பின்னர் சொத்து சேதங்களை சீர்செய்வதற்கும் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மேலதிக 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, தேவையென்றால் மேலும் நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சொத்துக்கள் முழுமையாக சேதமடையாத மக்களின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...