திலினியின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளித்த ஜானகி சிறிவர்த்தன

Date:

226 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்போது வெலிக்கடை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டாவது இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர், சுமார் 05 மணித்தியால விசாரணையின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

கிரிஷ் இயக்குனர் ஜானகி சிறிவர்தனவும் அந்த இடத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12ஆம் திகதி, சந்தேகநபரான திலினி பிரியமாலி, கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு, இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலின பிரியமாலி, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...