தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத அகழ்வுக்கு அனுமதி வழங்கியமை, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மூட்டையை விடுவிக்க முற்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.