அரசாங்கம் தற்போது காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, மக்கள் தேர்தலையே கோருவதாகவும், தேர்தலே நாட்டின் அவசரத் தேவை எனவும் தெரிவித்தார்.
தேர்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை குழப்பி, சிக்கலாக்கி பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என கிரியெல்ல தெரிவித்தார்.