பேராதனையில் மாணவர்கள் மீது தாக்குதல், 8 பேர் வைத்தியசாலையில்

Date:

சமூக ஊடக தணிக்கைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இலவசக் கல்வி, மருத்துவப் பட்டங்களை விற்கும் அரசின் சதியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியாக பேராதனை விடுதிக்கு அருகில் வந்தபோது, நூற்றுக்கணக்கான பொலிஸார் வீதியை மறித்து மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுமார் 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....