இஸ்ரேல்-காஸா போரால் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

0
180
FILE PHOTO: Gold bars from the vault of a bank are seen in this illustration picture taken in Zurich, Switzerland, November 20, 2014. REUTERS/Arnd Wiegmann/File Photo

இஸ்ரேல் மற்றும் காஸா போரை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாரம் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது” என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here