கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல்

Date:

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Iravat’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைய இந்த கப்பல் வரவேற்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

124.8 மீட்டர் நீளமும், மொத்தம் 170 பணியாளர்களுடன் ‘INS Iravat’ என்ற இந்த போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் கட்டளைத் தளபதி கமாண்டர் ரிந்து பாபுவுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இன்று காலை இடம்பெற்றது.

மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

‘INS Iravat’ என்ற கப்பல் நாட்டில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கப்பலில் வந்த கடற்படையினர் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இந்திய கப்பல் இன்று (19) நாட்டில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...