செங்கோலை அவமதித்த அஜித் மானப்பெரும சபையில் இருந்து விரட்டி அடிப்பு!  

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய ஒழுக்கக் கேடான செயலாகும் என தெரிவித்த சபாநாயகர், அதனடிப்படையில் இன்று (19) முதல் நான்கு வார காலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கமான முறையில் செயற்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வாய்மூல கேள்விகளின் போது ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கவும் ஏற்பாடு செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...