செங்கோலை அவமதித்த அஜித் மானப்பெரும சபையில் இருந்து விரட்டி அடிப்பு!  

0
160

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய ஒழுக்கக் கேடான செயலாகும் என தெரிவித்த சபாநாயகர், அதனடிப்படையில் இன்று (19) முதல் நான்கு வார காலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கமான முறையில் செயற்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வாய்மூல கேள்விகளின் போது ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கவும் ஏற்பாடு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here