நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி

0
60

நாட்டில் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி கிடைத்துள்ளதாக சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, கட்சிக்குள் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிந்திக்காமல் எப்போதும் நாட்டின் நலனுக்காக சிந்தித்து மறுசீரமைப்பை மேற்கொள்ளும் கட்சி என்றே கூற முடியும் என காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனித்துப் போராடுவதாகவும் எதிரணி அரசியல் குழுக்கள் அவரது காலை இழுப்பதாகவும் தெரிகிறது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, கட்சியின் சிறப்பு மாநாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here