திருமலையில் வலது காதில் இரத்தக் கசிவுடன் ஆணின் சடலம் மீட்பு!

Date:

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று(23) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (வயது 35)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவுய் குறித்த நபர் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தினர் எனவும், மற்றைய இருவரும் வீடுகளுக்குச் சென்றனர் எனவும், குறித்த நபர் மது அருந்திய இடத்தில் நேற்று (23) காலை சடலமாக மீட்கப்பட்டார் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று சடலத்தைப் பார்வையிட்டார்.

சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாரை நீதிவான் பணித்தார்.

Add New Post

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈச்சிலம்பற்று பொலிஸார், உயிரிழந்த நபருடன் மது அருந்திய இருவரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...