அமைச்சரவை மாற்றம்; ஜனாதிபதி மீது பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி

Date:

அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பொதுஜன பெரமுனவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். என்றாலும், ஜனாதிபதி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.

இம்முறையும் ஜனாதிபதி தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் தலைமை ஜனாதிபதி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...