ரங்காவை கைது செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

0
213

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அவரை வரும் 7ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு ஸ்ரீரங்காவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here