அறுகம்பே தாக்குதல் சதி குறித்து மூவர் கைது

Date:

நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று (24) பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர்கள் மனப்பூர்வமாகவோ அல்லது அறியாமலோ ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்களா என கேள்வி எழுப்புவதாகவும், அதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை காரணமாக, இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், குழப்பத்தை உருவாக்கும் திட்டம் குறித்து புலனாய்வு அமைப்புகள் தகவல் பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை அளித்துள்ளதாக ஹேரத் கூறினார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு நிபந்தனை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில்...

ராஜித முன்பிணை மனு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு...

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஷாருக்கான் வருகையும், புதிய கேசினோவும்!

ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" ஹோட்டல் வளாகத்தில்...

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...