யாலதேசிய பூங்காவிற்குள் வனவிலங்குகளை தொந்தரவு செய்தவர்களை தடுக்க தவறிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் !

Date:

யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில் ஈடுபடுவதையும் வனவிலங்குகளை துன்புறுத்துவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். அவர்களுடைய பதவிகள் சமூக அந்தஸ்த்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களை கைதுசெய்யுமாறு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.குறிப்பிட்ட நபர்களும் வாகனங்களும் தேசிய பூங்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய பூங்காவிற்குள் விலங்குகளை துன்புறுத்துபவர்கள் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாலதேசிய பூங்காவிற்குள் வாகனங்களை பயன்படுத்தி வனவிலங்குகளிற்கு பாதிப்பை இடையூறை ஏற்படுத்தியவர்களிற்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார் வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...