Saturday, October 26, 2024

Latest Posts

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையும் பணியில்

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைதான மூவரும் கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.