விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின் சொத்து–பாதகம் அறிவிப்பை தொடர்பாக ஹிரு செய்தி வெளியீடு அவரை அவமதித்துள்ளதாக கூறி, ரூ. 1000 கோடி இழப்பீடு வழங்குமாறு கோரி அவரது வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசுக்கு, ஹிரு மீடியா நெட்வொர்க் தனது வழக்கறிஞர்கள் மூலம் பதிலளித்துள்ளது.
அதன்படி, குறித்த நோட்டீஸில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரிப்பதுடன், அதில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளையும் மறுப்பதாக ஹிரு மீடியா நெட்வொர்க்கின் வழக்கறிஞர்கள், லால்காந்த் அமைச்சரின் வழக்கறிஞருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
மேலும், “திருத்த உரிமை” (Right of Reply) என்பதை ஏற்றுக்கொண்டு, தங்களது வாடிக்கையாளர் ஏஷியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பைவேட்) லிமிடெட் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி ஹிரு டிவி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து ஊடக தளங்களிலும் குறித்த செய்தி தொடர்பாக உடனடி திருத்தத்தை வெளியிட்டதாகவும், ஹிரு மீடியா நெட்வொர்க் சார்பில் சுதத் பெரேரா அசோசியேட்ஸ் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் இலக்கம் 09 ஆகும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், லால்காந்த் அமைச்சரின் சொத்து–பாதகம் அறிவிப்பில் குறைகள் உள்ளதாகவும், அது சட்டப்படி முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், லால்காந்த் அமைச்சர் தங்களது வாடிக்கையாளருக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை தொடங்கினால், நிறுவன குடிமகனாக தங்களது உரிமைகளைப் பயன்படுத்தி சட்டப்படி எதிர்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு செய்யும் போது கட்டாய சட்ட விதிகளை திட்டமிட்டு மீறியமை தொடர்பாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லால்காந்த் அமைச்சர் பொதுமக்கள் முன் தானே ஒப்புக்கொண்டதுபோல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் போன்ற செயல்களில் தொடர்புடையவர் என்பதால், ஏதேனும் வழக்கு தொடுக்கப்பட்டால், அவரது கண்ணியத்தை பாதிக்கக்கூடிய நிலை இல்லை என்ற வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்போம் என்றும் ஹிரு மீடியா நெட்வொர்க் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்களது வாடிக்கையாளரின் ஒளிபரப்பு உரிமையை தவறாகத் தடுக்க முயலும் எந்தச் செயலுக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ் சட்ட நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
