ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக வரும் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியில் இருந்து ரூபாய் 166 இலட்சம் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை CID அதிகாரிகள், அவரது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அன்று காலை சுமார் 9.00 மணியளவில், மால்பாதையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனியார் இல்லத்திற்கு சென்ற CID அதிகாரிகள், பிற்பகல் 3.00 மணி வரை அங்கு தங்கி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...