எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 15 ஆசனங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி முன்னிலை – ஐக்கிய மக்கள் சக்திக்கு 6; மொட்டுக்கு 3

Date:

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17 ஆயிரத்து 295 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆயிரத்து 597 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2 ஆயிரத்து 612 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

சுயேச்சைக் குழு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 568. அதன்படி, சுயேச்சைக் குழு, 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைத் தமதாக்கிக் கொண்டது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தை வென்றுள்ளது.  

நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்தத் தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...