நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

0
118

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் பல எதிர்க்கட்சிகள் இணைந்து நவம்பர் 21 ஆம் தேதி நுகேகொடையில் நடத்தவுள்ள பேரணியில் சமகி ஜன பலவேகய பங்கேற்காது என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

“சமகி ஜன பலவேகய இதில் பங்கேற்காது. அதுதான் எங்கள் அரசியல். நாங்கள் எங்கள் அரசியலை, எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறோம். நாங்கள் எல்லாவற்றையும் ஊடகங்களுக்குச் சொல்வதில்லை,”

நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.எம். மரிக்கார் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here