பாடசாலை மாணவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்

Date:

மாத்தறை திஹாகொட பிரதேசத்தில் நேற்று (28) பாடசாலை மாணவர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மித்தவெல – கந்தேபொல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிடச் சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி வெடித்ததுடன், குறித்த மாணவன் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 14 வயதுடைய மாணவன் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் திரண்டதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...