முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை செலவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில், பொது சொத்து சட்டத்தின் கீழ், 1.69 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 22 ஆம் திகதி காவலில் வைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான மேலும் அறிக்கைகள் இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தபோது, ஒன்றரை நாட்களில் ரூ. 1.69 மில்லியனை தவறாக பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பயணம் இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ விஜயம் என்று ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் கூறியிருந்தது.
