Friday, October 18, 2024

Latest Posts

வசந்த யாப்பா பண்டார இன்று CID இற்கு அழைப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்தக நிறுவனம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளமை ஒரு பின்னணியில் உள்ளது.

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து டோட்டல் பேரன்டெரல் நியூட்ரிஷன் என்ற மருந்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்த கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்து நிறுவனம் முறைப்பாடு செய்திருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நிறுவன உரிமையாளரால் இதேபோன்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கூறியதில் உண்மையில்லை எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் எந்தவிதமான மோசடி அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார வெளியிட்ட அவதூறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்த கருத்தும் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.