லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

Date:

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர்.

தேயிலைத் தோட்ட காணிகளில் 30% அல்லது 40% ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன. சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன. இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்.

ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும்.

பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...