மீண்டும் ஒரு சீனி இறக்குமதி மோசடி?

Date:

இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோவிற்கு 25 சதம் இறக்குமதி வரி நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாவிலிருந்து 300-325 ரூபாவாக அதிகரிக்குமெனவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனி வரி அதிகரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பிரதான சீனி இறக்குமதியாளர் 8000 மெட்ரிக் தொன் சீனியை 25 சத வரிக்கு இறக்குமதி செய்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2020இல் சீனி இறக்குமதி வரியை ஐம்பது ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அப்போதைய அரசாங்கம் குறைத்தது.

இதனால் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத்திற்கு 10,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...