Sunday, September 8, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06/11/2022

1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பி. வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன, ஜீவன் தொண்டமான் (இ.தொ.கா.), டி. திசாநாயக்க (ஸ்ரீ.ல.சு.க.), மற்றும் வஜிர அபேவர்தன (ஐ.தே.க.) ஆகியோர் விரைவில் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பேர் SJB கட்சியில் இருந்து அமைச்சு பதவி பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. சீனா உட்பட அனைத்து முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களும் சமீபத்திய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறுகிறார். IMF கடனைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், IMF வாரியத்தின் ஒப்புதல் ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

3. சர்வதேச நாணய நிதியத்தை அணுகும்போது எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுகிறார். IMF க்கு “அடிப்பணிவதற்கு” எதிராக எச்சரிக்கிறார். அத்துடன் மக்கள் தங்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.

4. உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் செப்டம்பர் 22 இல் USD 1,779 மில்லியனிலிருந்து அக்டோபர் 22 இல் 4.2% குறைந்து USD 1,704 மில்லியனாக உள்ளது. 2022 ஆம் ஆண்டின் 2வது மற்றும் 3வது காலாண்டுகளில் 3.2 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட அந்நிய செலாவணி கடன்கள் குவிந்தன, ஆனால் செலுத்தப்படவில்லை. முந்தைய ” பொருளாதார நிபுணர்”, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், கையிருப்பு அதிகரிக்கும் என்று கூறுகிறார்.

5. ஆளுனர் வீரசிங்கவின் முதல் 210 நாட்களில் மத்திய வங்கியின் T-பில் ஹோல்டிங்ஸ் (“பணம் அச்சிடுதல்”) ரூ.713 பில்லியன்களை பதிவு செய்துள்ளது. வட்டி விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்த பிறகும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3.4 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநர் கப்ரால் மற்றும் லக்ஷ்மண் கீழ் “ஒரு நாளைக்கு” அச்சிடப்பட்ட நிதியை விட சராசரியாக 54% அதிகம்.

6. பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளூர் சபைகளுக்கான எல்லைகளை வரையறுக்க 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவை நியமித்தார். அதன் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சுற்றுலா ஹோட்டல்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக உள்ளதாகவும் இந்த ஆண்டில் மீதமுள்ள 2 மாதங்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை என்றும் சுற்றுலா ஹோட்டல்ஸ் தலைவர் எம் சாந்திகுமார் கூறுகிறார்.

8. கனேடிய புலம்பெயர்ந்தோரால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் “உள்கட்டமைப்பு முதலீட்டை” இலங்கை பெற வாய்ப்புள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். ஆனால் மேலதிக விவரங்களை கொடுக்கவில்லை.

9. உடல்நிலை மோசமடைந்ததால், 45 வயதான இலங்கையில் பிறந்த ‘தேவி’ யானையை கருணைக்கொலை செய்துள்ளதாக சான்டியாகோ உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.

10. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் குரூப் 1 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியது. SL 141/8 (20 ஓவர்கள்). ENG 144/6 (19.4 ஓவர்கள்). குழு 1இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.