நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டிய காரணத்தை விளக்குகிறார் திலித்

Date:

மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திலித் ஜயவீர, தான் 30 வருடங்களாக மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டு இலங்கையில் தேசியவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவித்தார்.

அந்த தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக அந்த அணியை காட்டிக்கொடுத்த பின்னணியில் அதனை பாதுகாப்பதற்காக நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முகாம் என்பது இந்த நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களின் முகாம் என்று கூறிய ஜெயவீர, அந்த முகாமில் வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், தேசிய முகாமில் யாராவது இணைந்தால் அது மௌபிம ஜனதா கட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் பின்னர் திலித் ஜயவீர, அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...