நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டிய காரணத்தை விளக்குகிறார் திலித்

Date:

மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திலித் ஜயவீர, தான் 30 வருடங்களாக மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டு இலங்கையில் தேசியவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவித்தார்.

அந்த தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக அந்த அணியை காட்டிக்கொடுத்த பின்னணியில் அதனை பாதுகாப்பதற்காக நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முகாம் என்பது இந்த நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களின் முகாம் என்று கூறிய ஜெயவீர, அந்த முகாமில் வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், தேசிய முகாமில் யாராவது இணைந்தால் அது மௌபிம ஜனதா கட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் பின்னர் திலித் ஜயவீர, அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு–6 குடியிருப்பு திட்டம்: 84 குடும்பங்கள் சிக்கலில் – ரூ.500 மில்லியன் மோசடி!!

தனது சொந்த வீட்டை வாங்குவது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மிகப்பெரிய கனவாகும்....

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...