நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டிய காரணத்தை விளக்குகிறார் திலித்

Date:

மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திலித் ஜயவீர, தான் 30 வருடங்களாக மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டு இலங்கையில் தேசியவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவித்தார்.

அந்த தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக அந்த அணியை காட்டிக்கொடுத்த பின்னணியில் அதனை பாதுகாப்பதற்காக நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முகாம் என்பது இந்த நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களின் முகாம் என்று கூறிய ஜெயவீர, அந்த முகாமில் வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், தேசிய முகாமில் யாராவது இணைந்தால் அது மௌபிம ஜனதா கட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் பின்னர் திலித் ஜயவீர, அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...