நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டிய காரணத்தை விளக்குகிறார் திலித்

Date:

மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திலித் ஜயவீர, தான் 30 வருடங்களாக மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டு இலங்கையில் தேசியவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவித்தார்.

அந்த தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக அந்த அணியை காட்டிக்கொடுத்த பின்னணியில் அதனை பாதுகாப்பதற்காக நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முகாம் என்பது இந்த நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களின் முகாம் என்று கூறிய ஜெயவீர, அந்த முகாமில் வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், தேசிய முகாமில் யாராவது இணைந்தால் அது மௌபிம ஜனதா கட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் பின்னர் திலித் ஜயவீர, அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...