மக்களின் நம்பிக்கை இன்றி நாட்டை ஆள முடியாது

0
35

மூன்றில் இரண்டு பெரும்பான்மையான பாராளுமன்றம் இருந்தாலும் மக்கள் நம்பிக்கையின்றி எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குடன் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்கள் மாத்திரமே நாட்டை ஆட்சி செய்தமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here