Tuesday, May 7, 2024

Latest Posts

எவருக்கும் அநீதி இடம்பெற இடமளியோம்

“இது மொட்டுக் கட்சியின் ஆட்சி. இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்னர்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது இதனைக் கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள் என்பது உண்மை. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிரணியில் அன்று குளிர்காய முற்பட்டனர். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மொட்டுக் கட்சியின் ஆட்சி தொடர்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருகின்றது.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.