போகம்பறை சிறைச்சாலைக் கட்டடம் தலதா மாளிகைக்கு வழங்க ஏற்பாடு

Date:

கண்டி – போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்தை தலதா மாளிகைக்கு அல்லது முதலீட்டுத் திட்டத்திற்கு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திருத்தியமைக்கப்பட்ட கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்திற்கு செலவான பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை தலதா மாளிகைக்கு வழங்குவதற்கு அல்லது வேறு முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...