ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (10) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
எதிர்வரும் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி அனைத்து ஊழியர்களின் சம்பளமும் ரூ. 20,000 உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை பொலீசார் தடுக்கவில்லை.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன








