Sunday, May 25, 2025

Latest Posts

கெஹலிய குடும்பத்தின் 50 மில்லியன் முயற்சி முறியடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த காலங்களில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் கெஹலிய உட்பட கெஹலிய குடும்பத்தைச் சேர்ந்த 06 பேருக்குச் சொந்தமான பல நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளின் கொடுக்கல் வாங்கல்களை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் சிக்காமல் இருந்த 50 மில்லியன் ரூபா வைப்புத் தொகையை நவம்பர் 09 ஆம் திகதி கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் பெற முயற்சித்த செய்தியை நாம் வெளிப்படுத்தினோம்.

அதாவது, “சிஐடியால் தவறவிட்ட 50 மில்லியன் வைப்புத்தொகையை மீட்க கெஹலிய குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி!” செய்தியிலிருந்து.

எமது கண்டுபிடிப்புக்குப் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் (FIU) தலையீட்டால், அந்தத் தொகையை மீட்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இலங்கை வங்கியின் கிளை ஒன்றில் இருந்து உரிய தொகையை மீட்பதற்கு கெஹலியவின் மகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக செய்திகளை வெளியிட்ட LNW இணைய ஊடகத்திற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.