ஆனையிறவு சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!

Date:

கிளிநொச்சி – ஆனையிறவில் கடந்த 17 வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி நேற்று செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழியான ஆனையிறவு வரலாற்றுக் காலம் தொட்டு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1952ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு சோதனைச் சாவடியும் இயங்கி வந்தது.

வரலாற்றுக் காலம் தொட்டு போர் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இராணுவ முகாமும் சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டன.

இறுதிப் போர் நடவடிக்கையின்போது ஆனையிறவை 2008ஆம் ஆண்டு இராணுவம் மீளக் கைப்பற்றியது. இதன் பின்னர் கடந்த 17 வருடங்களாக இயங்கி வந்த சோதனைச் சாவடியே தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...