பொதுத் தேர்தல் – 20 வெளிநாட்டு கண்காணிப்பார்கள் வருகை

Date:

பொதுத் தேர்தல் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையில் 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, தாய்லாந்து, தெற்காசிய நாடுகளின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதானிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்து பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இவர்கள் தொடங்க உள்ளனர்.

இதேவேளை, ANFREL சர்வதேச அமைப்பின் கண்காணிப்பாளர்கள் குழு நேற்றுமுன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு அப்பால் உள்நாட்டிலும் பெவ்ரல், கபே உட்பட பல அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...