நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதல் தொடக்கம் இன்று ஆரம்பம்

Date:

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம ஜனாதிபதி ஆலோசகராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக பணியாற்றுகிறார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சஞ்சய் கருணாசேன, ஹர்ஷ புரசிங்க, சந்திமா குரே, பந்துல ரணதுங்க, ஜெஃப்ரி சல்பர், சமிச அபேசிங்க, ஷனக ரெபெல் ஆகியோர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...