நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதல் தொடக்கம் இன்று ஆரம்பம்

Date:

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம ஜனாதிபதி ஆலோசகராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக பணியாற்றுகிறார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சஞ்சய் கருணாசேன, ஹர்ஷ புரசிங்க, சந்திமா குரே, பந்துல ரணதுங்க, ஜெஃப்ரி சல்பர், சமிச அபேசிங்க, ஷனக ரெபெல் ஆகியோர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...