“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது” – டில்வின் சில்வா

Date:

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் விகிதாசார வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சியொன்றுக்கு கிடைத்த அதிகூடிய ஆசனங்கள் இதுவாகும்.

225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி 159 இடங்களைக் கைப்பற்றியது.

வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தனது கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...