ரவியின் செயலால் கடும் கோபத்தில் ரணில்!!

Date:

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ஊடாக ரவி கருணாநாயக்கவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் கோபமடைந்துள்ளதாக முன்னர் செய்தியொன்றில் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை சாகல ரத்நாயக்கவுக்கு வழங்க கடுமையாக முயற்சித்து வந்தார்.

விக்கிரமசிங்க இந்த இரண்டு எம்.பி பதவிகளுக்கான நியமனங்களை முடிந்தவரை தாமதப்படுத்த விரும்பியதுடன் ரவி கருணாநாயக்க தனது பெயரை கட்சியின் செயலாளர் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பினார்.

இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் ரொனால்ட் சி. பெரேராவைத் தொடர்பு கொண்டு, இருவருக்கும் இந்த ஆசனங்கள் சொந்தமாக இருப்பதால், ஆசனங்களைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் அளவுக்கு ரணில் விக்கிரமசிங்க கோபமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று (நவம்பர் 18) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...