Sunday, May 25, 2025

Latest Posts

ரவி கருணாநாயக்க வீட்டிற்கு பாதுகாப்பு

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனம் தற்போது உள்ளக நெருக்கடியாக மாறியுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பெருமளவிலான மக்கள் தயாராக இருப்பதே இதற்குக் காரணம்.

தேசிய பட்டியலில் புதிய ஜனநாயக முன்னணி 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

மேலும், புதிய ஜனநாயக முன்னணியினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ரவி கருணாநாயக்கவின் பெயர் நேற்றிரவு (18) கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் அங்கீகாரம் இன்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில், அந்தந்த அரசியல் கட்சிகள் வகித்து வந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பிரதிநிதிகள் நியமனம் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம், கட்சியின் பொதுச் செயலாளர் ஷியாமலா பெரேரா, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததையடுத்து நெருக்கடி அதிகரித்தது.

ஆனால் தனது அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்க பெயர் அனுப்பப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, ரவி கருணாநாயக்கவின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பங்குதாரர்கள் இன்று கொழும்பில் கூடவுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றிரவு வர்த்தமானி மூலம் அறிவித்தது.

இதேவேளை, இன்று காலை கொழும்பில் உள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.