இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு!

Date:

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது சபையில் உரையாற்றிய ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வரவு செலவுத் திட்ட அமர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கூட்டத்தை கூட்டுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு அடுத்த வாரம் டிசம்பர் 08 ஆம் திகதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 08 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...